Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
இராதாபுரம்: இராதாபுரம் வட்டாரத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் ஜாஸ்மின் லதா அவர்களின் அறிவுறுத்தலின் படி உலக தென்னை தினம் பட்டார்குளம் கிராமத்தில் வைத்து நடைபெற்றது.
இராதாபுரம் வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஜாய் பத்ம தினேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசி தென்னை மரத்தின் பயன்கள் பற்றியும், தென்னை நுண்ணுட்ட உரத்தின் நன்மைகள் மற்றும் அதன்னை பயன்படுத்தும் முறைகள் பற்றியும், மேலும் காண்டாமிருக்க வண்டுகள் தாக்குதல் பற்றிய அறிகுறிகள், சிவப்பு கூண் வண்டுகள் பற்றிய அறிகுறிகள் அதனை தடுக்கும் முறைகள் பற்றியும் கூறினார்.
உதவி தொழில் நுட்ப மேலாளர் சரிகா அவர்கள் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பற்றியும், அதனை தடுக்கும் முறைகள் பற்றியும், சொட்டு நீர் பாசனத்தின் பயன்கள் பற்றியும், சொட்டு நீர் பாசன திட்டத்தின் மானிய விவரங்களையும் கூறினார். உலக தென்னை தினத்திற்கு ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டதிற்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் சரிகா செய்து இருந்தார்.